மக்கள் முன்னுள்ள தெரிவுகள்

இந்த ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல், சிங்கள மக்கள் நடுவே, மூன்று பேரினவாதக் கூட்டணிகளிடையிலான போட்டியாக வுள்ளது. அரசாங்கக் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்துகொண்ட விதமாகவே இத் தேர்தலிலும் அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் பெரும் வெற்றி யூஎன்.பியையம் ஜே.வி.பியையும் கணிசமாகப் பாதித் துள்ளது. பொதுத் தேர்தலிலும் யூ.என்.பி. தன் அடையாளத்தைத் தவிர்த்தல் அதன் எதிர்காலத்ததைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற எண்ணம் யூஎன்.பியினுள் வலுவாகியது. யூ.என்.பியின் சின்னத்தின் கீழ்த் தேர்தலில் நின்றால், ஏற்கெனவே யூ.என்.பியுடன் கூட்டுச் சேர்ந்ததனாற் கவிழ்ந்த நம்பகத்தன்மையை முற்றாக இழக்க நேரும் என்ற அச்சம் ஜே.வி.பியினுள் வலுவாக இருந்தது. எனவே யூ.என்.பி.-ஜே.வி.பி. ஐக்கிய முன்னணி இயலாத ஒன்றாகி விட்டது.

ஜே.வி.பி. – சரத் பொன்சேகா உறவு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு க்கு முன்பே இருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, சரத் பொன்சேகா தலைமையில் ஜே.வி.பி;. வழிநடத்தும் இன்னொரு பேரினவாதத் தேர்தல் கூட்டணி உருவாகியுள்ளது. ஆனால், சரத் பொன்சேகாவின் கைதுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கட்கும் மேலாக, அவரையும் அவரது குடும்பத்தையும் தொடர்பு படுத்திய நிதி ஊழல் குற்றச்சாட்டுக்கள், அவரைப் புனிதராகக் காட்டி வாக்குச் சேகரிக்கும் கூட்டணிக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு, தென்னிலங்கையில் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கவும் அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும் வல்ல மாற்று அரசியல் அணியொன்றைக் கட்டியெழுப்பும் வாய்ப்பு இம் முறையும் தவறவிடப் பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு, குறுகிய தேசியவாதத் தலைமைகளையும் பாராளுமன்ற இடதுசாரிகளையும் மட்டுமன்றிச், சுயநல நோக்காற் பிளவுண்டு கிடக்கும் ட்ரொட்ஸ்கியக் கட்சிகளையும் கணிசமானளவு சாரும்.

இவ்விதமான அவலத்திடையே, முதலாளிய உலகமயமாக்கலைத் தடையின்றித் தொடர்வதற்கான நிலைமைகள் மேலும் கனிந்துள்ளன. அதற்கு வசதியாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் பலவேறு செயற்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஊடகத் துறை மீதான நெருக்குவாரங்கள் வலுப்பட்டுள்ளன. காவல் துறை, முன்னெப்போதும் இல்லாதளவு, ஆளுங் கட்சியின் அரசியற் கருவியாக உள்ளது. இன்றைய ஆட்சி மீளுமாளால் அடக்குமுறைகள் மேலும் வலுப்படுவது உறுதி. அதே வேளை, பிரதான எதிரணிகள் இரண்டிடமும் ஜனநாயக மீட்புக்கான செயல் திட்டங்கள் இல்லை.

பலவீனமான பொருளாதாரம் மக்கள் மீது மேலும் சுமையேற்றும் போது, அரச அடக்குமுறை கூடும். ஏலவே வலுப்பட்டுள்ள ராணுவ பொலிஸ் அதிகார யந்திரங்கள் தமது செல்வாக்கு நலிவதற்கு இடங் கொடுக்கப் போவதில்லை. எல்லா விதமான அந்நியப் பொருளாதார ‘உதவிகளும்’ மக்கள் மீதான சுமைகளைக் கூட்டுமே ஒழியக் குறைக் காது என்பதை மனதிற் கொண்டால், இன்றைய சூழலில், மக்கள் பாரிய பொருளாதாரச் சுமைகட்கும் அடக்கு முறைக்கும் உட்படுவதை வரக்கூடிய எந்த ஆட்சியாலும் தவிர்க்க இயலாது என விளங்கும்.

இந்த நிலையில், எழக்கூடிய சிங்கள மக்களின் எதிர்ப்பைத் திசை திருப்பச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது இன ஓடுக்கலை வலுப் படுத்தித் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்காமல் இழுத்தடிப்பது எந்தப் பேரினவாத அரசாங்கத்துக்கும் வசதியானதே. எனவே இலங் கையின் அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கான முன்னெடுப்பு மேலும் முக்கியமாகிறது.

இப் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாற்று அரசியல் பாதையை வலியுறுத்திப் போட்டியிடும் கட்சியாகப் புதிய-ஜனநாயகக் கட்சி மட்டுமே உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைத் தேசிய இனங்களதும் இடதுசாரிக் கட்சிகளதும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துமாறு புதிய-ஜனநாயகக் கட்சி விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்துத் தனித்துப் போட்டியிட்ட மூன்று ட்ரொட்ஸ்கியக் கட்சி களதும் அரசியல் அற்பத்தனத்தை மக்கள் தெளிவாகவே இனங்கண்டு கொண்டனர். அவ்வாறே, முற்றிலும் சுயநல நோக்கத்துடன், பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவரையோ மற்றவரையோ ஆதரிக்கும்படி சிறுபான்மைத் தேசிய இனத் தலைமைகள் விடுத்த கோரிக்கைகளை மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கின் தமிழ் மக்கள், நிராகரித்தனர்.

புதிய-ஜனநாயகக் கட்சி இவ் விடயத்தில் நேர்மையாகவும் தெளிவா கவும் நடந்துள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களதும் இடதுசாரிக் கட்சிகளதும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த இயலாத நிலையில், மக்கள் தமது வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கி;த் தேர்த லை நிராகரிக்க வேண்டும் என அது மக்களைக் கேட்டுக் கொண்டது. வடக்கில் 80மூ மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை நிராகரித்ததை நாம் ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகக் கொள்ளலாம்.

இத்தகைய ஒரு சூழலிலே, பாராளுமன்றப் பாதை மூலம் ஒடுக்கப் பட்ட தேசிய இனங்களோ இலங்கையின் சுரண்டப்படும் உழைக்கும் மக்களோ விடுதலையோ விமோசனமோ பெற இயலாது என்ற தெளிவு டன் யாழ்ப்பாணத்திலும் மலையகத்திலும் புதிய-ஜனநாயகக் கட்சி தேர்தலிற் போட்டியிடுகிறது. தேர்தல் பிரசார வேலைகளைக் கூட மாற்று அரசியலுக்கான ஒரு தளத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே புதிய-ஜனநாயகக் கட்சி முன்னெடுத்து வந்துள்ளது.

தமிழ்த் தேசியவாதம் பேசிக்கொண்டு இந்திய அல்லது அமெரிக்கச் செய்நிரல்களை முன்னெடுக்கிற கட்சிகளினதோ அரசாங்கத் தரப்பை யோ யூ.என.பியையோ அண்டி நிற்கிற தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகளினதோ சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை ஏற்படுத்தத் தயங்காத சில இடதுசாரிக் கட்சிகளினதோ கொள்கை விளக்கங் களைப் புதிய-ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கத் துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், புதிய-ஜனநாயகக் கட்சி மட்டுமே, தனது இலக்குக்களையும் வேலைத் திட்டத்தையும் பற்றி ஒளிவுமறைவின்றிப் பேசுவதுடன் மக்கள் அரசியலை முன்னெடுக்கும் நோக்குடையது என்பது தெளிவாகும்.

நாட்டை எந்தக் கட்சியோ கூட்டணியோ ஆண்ட போதும், வடக்கு-கிழக்கில் அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள் என யாருடைய ஆதிக்கம் நிலவிய போதும், தனது கொள்கையிலோ நிலைப்பாட்டிலோ விட்டுக்கொடுப்பின்றி உறுதியாக இருந்துவந்த கட்சி என்ற வகையிலும், மலையகத் தமிழரின் கல்வி, தொழில், பிரதேசம், தேசிய இன உரிமை என்பவற்றுக்காகவும் தோட்டத் தொழிலாளரின் நியாயமான ஊதியத்திற்காகவும் சந்தர்ப்பவாதக் கட்சிகளின் காட்டிக் கொடுப்புக்களின் நடுவிலும் உறுதியாகப் போராடி வந்த கட்சி என்ற வகையிலும், மக்களுக்கான மாற்று அரசியல் பாதையை முன்னெ டுக்கவும் வரவுள்ள காலத்தில் இலங்கையில் உருவாகக்கூடிய பிற ஏகாதிபத்திய விரோதச் சக்திகளுடன் தோளோடு தோள் நின்று போராடக் கூடிய அதி முக்கிய அமைப்பாகப் புதிய-ஜனநாயகக் கட்சியே மக்கள் முன்னுள்ளது.

யாழ்ப்பாணம், நுவரெலியா மாவட்டங்களிற் போட்டியிடும் புதிய ஜனநாகக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம்  மக்கள் மாற்று அரசியற் பாதை ஒன்றன் உருவாக்கத்தைப் பெரிதும் ஊக்குவிப்போராவர்.

Leave a Reply